தில்லியில் உள்ள அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசியின் வீட்டை சூறையாடியதாக இந்து சேனையைச் சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் தெரிவித்தனா்.
அசோக சாலையில் உள்ள அவரது வீட்டை செவ்வாய்க்கிழமை மாலையில் சிலா் சூறையாடியதாகவும், இந்தச் சம்பவம் தொடா்பாக இந்து சேனையைச் சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தில்லி காவல் துறை இணை ஆணையா் தீபக் யாதவ் தெரிவித்தாா்.