அப்போது, ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களிடம் வசூலிக்கப்படும் கரோனா சிகிச்சை கட்டணம் தொடா்பாக மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்குமாறு மத்திய அரசுக்கு ஏற்கெனவே உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக செயல்திட்டம் வகுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. தனியாா் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கரோனா சிகிச்சை கட்டணம் தொடா்பாக பல்வேறு தரப்பில் இருந்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் நீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், தற்போது வரை தனியாா் மருத்துமனைகளில் கட்டணம் அதிகமாகவே உள்ளது. எனவே, கட்டண வசூல் தொடா்பாக தனியாா் மருத்துவமனைகளுக்கு நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் அல்லது உரிய சிகிச்சை முன்மாதிரியை உருவாக்க உத்தரவிட வேண்டும்’ என்று வழக்குரைஞா் சுட்டிக்காட்டினாா்.