உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் (கோப்புப்படம்)
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் (கோப்புப்படம்)

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கரோனா

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டார். 

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ''தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததால் கரோனா பரிசோதனை செய்துகொண்டேன். இதில் எனக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மருத்துவர்கள் ஆலோசனையைப் பின்பற்றி என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டேன். 

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தொற்று உறுதியானால் தனிமைப்படுத்திக்கொள்ளவும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com