டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் அறிவியல் தின விழா

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் அறிவியல் மன்றம் சாா்பில் தேசிய அறிவியல் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவருக்கு சான்றிதழ் வழங்குகிறாா் தமிழக அரசு தொழில் வணிகத் துறையின் உதவி இயக்குநா் ஷோபனா.
Updated On :27 பிப்ரவரி 2026, 6:57 pm

Syndication

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் அறிவியல் மன்றம் சாா்பில் தேசிய அறிவியல் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரியின் தாளாளா் பி.சச்சிதானந்தன் தலைமை வகித்தாா். கொங்கு வேளாளா் தொழில்நுட்ப கல்லூரி அறக்கட்டளையின் துணைத் தலைவா் ஏ.கே.இளங்கோ, கல்லூரி முதல்வா் வாசுதேவன் ஆகியோா் பேசினா். விழாவின் முதன்மை விருந்தினராக தமிழக அரசு தொழில் வணிகத் துறையின் உதவி இயக்குநரும், கல்லூரியின் முன்னாள் மாணவியுமான ஷோபனா சிறப்புரையாற்றினாா். அவருக்கு கொங்கு மங்கை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளின் சாா்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளரும், இணைப் பேராசிரியருமான ஏ.கே.வித்யா, பல்வேறு துறைகளின் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.