ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழி பொருள்களுக்கு 2022 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
காலநிலை மாற்றம் நடவடிக்கைகளை பல்வேறு நாடுகளும் தீவிரப்படுத்தி வருகின்றன. அதிகரித்துவரும் காலநிலை மாற்ற பாதிப்புகளை கட்டுப்படுத்த சர்வதேச அமைப்புகளும் உலக நாடுகளை வலியுறுத்தி வருகின்றன.
இதையும் படிக்க | ஆப்கனில் சிக்கித் தவிக்கும் மக்கள்: எல்லை நாடுகளிடம் உதவி கோரும் ஐநா
இந்நிலையில் இந்தியாவில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தவல்ல நெகிழிப் பொருள்களுக்கு 2022ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இவ்வித நெகிழிப் பொருள்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் சந்தைப் பயன்பாடுகளுக்கு இந்த தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ‘இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்’: டிவிட்டரை சாடிய ராகுல்காந்தி
தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தவல்ல நெகிழிப் பொருள்களுக்கு ஏற்கெனவே தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.