முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 3ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தில்லியில் அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
பிரதமராக பதவியேற்ற முதல் பாஜக தலைவர் என்ற பெருமைக்குரிய வாஜ்பாய், தனது 93 ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி காலமானார்.
தில்லியில் அவர் நினைவாக சதைவ் அடல் என்ற பெயரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நினைவிடம் திறக்கப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 3ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தில்லியில் அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இதேபோல் குடியரசு துணைத் தலைவர் வெங்யைய நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.