'காபூல் விமான நிலையம் திறந்ததும் எஞ்சிய இந்தியர்கள் மீட்கப்படுவர்'

காபூல் விமான நிலையம் திறந்ததும் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
'காபூல் விமான நிலையம் திறந்ததும் எஞ்சிய இந்தியர்கள் மீட்கப்படுவர்'
'காபூல் விமான நிலையம் திறந்ததும் எஞ்சிய இந்தியர்கள் மீட்கப்படுவர்'
Updated on
1 min read

காபூல் விமான நிலையம் திறந்ததும் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்புடன் மீட்கும் பணிகளில் வெளியுறவுத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் செல்ல விமானங்களை ஏற்பாடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. பயணிகள் விமான போக்குவரத்திற்கு காபூல் விமான நிலையம் திறக்கப்பட்டவுடன் எஞ்சியுள்ள இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்படுவர் என்று தெரிவித்துள்ளது.

காபூல் விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப் படையில் சி-17 ரக விமானம் மூலம் நேற்று இரவு 120 பேரும், இன்று காலை 129 அதிகாரிகளும் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டிலுள்ள மக்கள் வெவ்வேறு நாடுகளுக்கு செல்ல முயன்றுவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com