ஆந்திரத்தில் செப். 4 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

ஆந்திரத்தில் செப்டம்பர் 4ஆம் தேதி வரை கரோனா பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக மாநில சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
ஆந்திரத்தில் செப். 4 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு
ஆந்திரத்தில் செப். 4 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு
Updated on
1 min read

ஆந்திரத்தில் செப்டம்பர் 4ஆம் தேதி வரை கரோனா பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக மாநில சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்கள் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வந்த நிலையில் ஆந்திரத்தில் மே 5-ம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

கரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், செப்டம்பர் 4ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்துள்ளனர். இரவு 11 மணிமுதல் காலை 6 மணிவரை இரவுநேர பொதுமுடக்கம் தொடர்ந்து அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் ஆணையர்கள் உறுதி செய்யவேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com