குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

தில்லியில் 13-வது நாளாக கரோனா பலி இல்லை: புதிதாக 17 பேர் பாதிப்பு

நாட்டின் தலைநகரான தில்லியில் புதிதாக 17 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

தில்லியில் கரோனா உயிரிழப்பு இல்லை

Updated On :23 ஆகஸ்ட் 2021, 6:35 pm IST

நாட்டின் தலைநகரான தில்லியில் புதிதாக 17 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கடந்த 13 நாள்களாக எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா தொற்றிலிருந்து 41 பேர் புதிதாக குணமடைந்தனர். 

தற்போது தில்லியில் 374 பேர் மட்டுமே கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தில்லியில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,37,334-ஆக உள்ளது. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 14,11,881-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் 0.04 சதவிகிதமாக உள்ளது. இன்று கரோனா உயிரிழப்பு ஏதும் பதிவாகாத நிலையில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25,079-ஆக உள்ளது. 

தில்லியில் கடந்த ஜூலை 18, 24, ஆகஸ்ட் 2, 4, 8, 11, 12, 13, 16, 20, 21,22 ஆகிய தேதிகளில் கரோனா நோய்த் தொற்றால் இறப்பு ஏதும் பதிவாகவில்லை. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.