

புதுதில்லி: தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜகவின் வசூல் வருமானம் 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது; ஆனால் மக்களுடைய வருமானம் உயரவில்லையே என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 2019-20 தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜகவின் வசூல் வருமானம் 50 சதவீகிதம் உயர்ந்துள்ளதுடன், மொத்தம் ரூ.3,623,28 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
ஆனால், கட்சியின் வருமானம் உயர்ந்தாலும், மக்களின் வருமானம் உயரவில்லையே என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.