உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்நூர் பகுதியில், புதிதாகப் போடப்பட்ட சாலையை திறந்து வைக்கும் விழாவில், பாஜக எம்எல்ஏ சாலையில் தேங்காயை உடைக்க, அது உடையவில்லை. ஆனால், புதிதாகப் போடப்பட்ட சாலைதான் சிதறி ஓடியது.
டிசம்பர் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தால், மிக மோசமான தரத்துடன் தார் சாலை போடப்பட்டது வெட்டவெளிச்சமானது, திறப்பு விழாவுக்கு வந்த பாஜக எம்எல்ஏ சுசி சௌத்ரி, இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அங்கேயே சாலை மறியலில் ஈடுபட்டார்.
இதையும் படிக்கலாமே.. தீபாவளி காரணமா? அக்டோபரில் ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கிய இந்தியர்கள்
பிறகு, தார்ச் சாலையின் சிதறிய பாகங்களை, ஒரு பையில் போட்டு, சோதனைக்காகக் கொண்டு சென்றுள்ளார் சுசி சௌத்ரி.
இது குறித்து தான் மாவட்ட நீதிபதியிடம் பேசியிருப்பதாகவும், சாலை போதுமான தரத்துடன் அமையவில்லை என்று புகார் கூறியிருப்பதாகவும், உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, தார் சாலையின் தரம் கண்டறிவதற்கான சோதனையும் நடைபெறுவதாகக் கூறியுள்ளார்.
இங்கு மாநிலத் தேர்தல் நெருங்குகிறது. அதனால், அவசர அவசரமாக சாலைகள் போடப்பட்டு, துவக்க விழாவும் நடைபெற்றது. நல்லவேளை, தேங்காய் சாலையில் பட்டு, யார் தலையிலும் விழாவில்லை என்கிறார்கள் சிரித்தபடி.