புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கோவாவில் அனைத்து வளங்களையும் பாஜக சுரண்டியுள்ளது: பிரியங்கா காந்தி

கோவாவில் உள்ள அனைத்து வளங்களையும் பாஜக தங்கள் சொந்த நலனுக்காக சுரண்டியுள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 3:15 pm

DIN

கோவாவில் உள்ள அனைத்து வளங்களையும் பாஜக தங்கள் சொந்த நலனுக்காக சுரண்டியுள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று ஒருநாள் பயமணமாக கோவா சென்றுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, கோவாவில் உள்ள அனைத்து வளங்களையும் பாஜக தங்கள் சொந்த நலனுக்காக சுரண்டியுள்ளது.

நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்கள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மாநிலத்தின் மக்களைப் பற்றி சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை. தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே அவர்களின் நோக்கமாக உள்ளது என்றார்.

இதனிடையே தெற்கு கோவாவில் உள்ள மொர்பிர்லா கிராமத்துக்கு சென்ற பிரியங்கா காந்தி அங்கு பழங்குடி மக்களுடன் நடனம் ஆடி மகிழ்ந்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.