இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,774 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 8,464 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 306 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,41,22,795 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 47,54,34 ஆக உயர்ந்துள்ளது.
மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 92,281 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நாட்டில் மொத்தம் 1,32,93,84,230 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.