மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
உருமாற்றமடைந்த ஒமைக்ரான் தீநுண்மி தொற்று தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல், சீனா, பிரேசில் உள்பட பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. வழக்கமான கரோனா தொற்றைக் காட்டிலும் அதி தீவிரமாக பரவக் கூடியதாக ஒமைக்ரான் தீநுண்மி கருதப்படுகிறது.
இதையடுத்து ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இன்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- இந்துக்களின் ஆட்சியை கொண்டு வர விரும்புகிறோம்: ராகுல் காந்தி
இதையடுத்து மகராஷ்டிரத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை மகாராஷ்டிரம்-18, ராஜஸ்தான் 9, தில்லி 2, குஜராத் 3, ஆந்திரம் 1, சண்டீகர் 1, கர்நாடகம் 3 என மொத்தம் 37 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலானோருக்கு மிதமான அறிகுறிகள்தான் தென்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலா் லவ் அகா்வால் கூறினாா்.