நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ஒருநாள் முன்கூட்டியே முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில், பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே 12 எம்.பி.க்கள் இடைநீக்கம், லக்கிம்பூர் விவகாரம், தேர்தல் திருத்த மசோதா, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பிரச்னைகளை கையிலெடுத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இரு அவைகளையும் டிசம்பர் 23ஆம் தேதிக்கு பதிலாக இன்றே முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.