நாட்டில் 60% பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: மன்சுக் மாண்டவியா

நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 60 சதவீதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)
மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)
Updated on
1 min read

நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 60 சதவீதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

கரோனா பெருந்தொற்றை தடுக்கும் ஆயுதமாக உலகம் முழுவதும் முழு வீச்சில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஜனவரி 16, 2020 முதல் பல கட்டங்களாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகின்றன.

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இதுவரை 139.70 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் இன்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

“மக்கள் பங்கேற்பு மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் அர்பணிப்புடன் கூடிய முயற்சியால், 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com