இந்தியாவில் டெல்டாவுக்கு மாற்றாக ஒமைக்ரான் பரவத் தொடங்கியிருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கரோனாவின் புதிய வகையான ஒமைக்ரான் தற்போது பல்வேறு நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு 1,270-யை எட்டியுள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் டெல்டா வகை கரோனாவின் இடத்தை தற்போது ஒமைக்ரான் பிடித்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
அதாவது பரவும் வேகம், தற்போது உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையைக் கொண்டு இந்தியாவில் டெல்டாவுக்கு மாற்றாக ஒமைக்ரான் பரவத் தொடங்கியிருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.