நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு புதிதாக 14,264 போ் பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 14,264 போ் பாதிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,09,91,651 ஆக உயா்ந்துள்ளது
நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு புதிதாக 14,264 போ் பாதிப்பு


நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 14,264 போ் பாதிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,09,91,651 ஆக உயா்ந்துள்ளது என்றும், இதுவரை குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,06,89,715 ஆக உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,56,302 ஆக உயா்ந்துள்ளதுடன், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணிநேரத்தில் மேலும் 90 போ் உயிரிழந்துள்ளனா்.

கரோனாவிலிருந்து ஒரே நாளில் 11,667 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,06,89,715 ஆக உயா்ந்துள்ளது. தேசிய அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 97.25 சதவீதமாக உள்ளது. அதே சமயத்தில் இறப்பு விகிதம் 1.42 சதவீதமாக குறைந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1,45,634 ஆகவும், தற்போது கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1.32 சதவீதமாக மட்டுமே உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவிக்கின்றன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) புள்ளிவிவரப்படி சனிக்கிழமை வரையிலும் நாடு முழுவதும் 21 கோடியே 09 லட்சத்து 31 ஆயிரத்து 530 பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், சனிக்கிழமை மட்டும் 6,70,050 பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மாலை  வரையிலும் 2,29,462 அமா்வுகள் மூலம் 1 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்துப 323 பேருக்கு கரோனா தடுப்பூசி மருந்துகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன. "இவர்களில் முதல் டோஸ் எடுத்துக்கொண்ட  63,52,713 சுகாதாரக் குழுக்களை சேர்ந்தவர்களும், இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்ட 8,73,940 சுகாதாரக் குழுக்களை சேர்ந்தவர்களும், முதல் டோஸ் எடுத்துக்கொண்ட 36,11,670 முன்கள பணியாளர்களும் அடங்குவர்" என்று தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் பிப்ரவரி 19 ஆம் தேதி வரை தடுப்பூசி போடப்பட்டவா்களில் மொத்தம் 43 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவா்களில் 26 போ் சிகிச்சைக்குப்பின் குணமடைந்தனா். அதே நேரத்தில் 16 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும், நாடு முழுவதும் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் 37 உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com