
ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் ரூ.30.8 லட்சம் செலவு செய்ய அனுமதி
புது தில்லி: புதுச்சேரி தவிர்த்து தமிழகம் உள்பட 4 மாநிலங்களிலும், ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் ரூ.30.8 லட்சம் செலவு செய்ய அனுமதி அளிக்கப்படுவதாக சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. புது தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் அட்டவணையை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் ஒரு தொகுதிக்கு ஒரு வேட்பாளர் 30.80 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும்.
அதாவது, புதுச்சேரியில் ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் ரூ.22 லட்சம் செலவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளர் ரூ.30.8 லட்சம் தேர்தல் செலவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...