தில்லியில் கடும் குளிர்: மனவுறுதியுடன் போராட்டத்தைத் தொடரும் விவசாயிகள்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லி எல்லைகளில் கடும் குளிருக்கு மத்தியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தில்லியில் கடும் குளிர்: மனவுறுதியுடன் போராட்டத்தைத் தொடரும் விவசாயிகள்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லி எல்லைகளில் கடும் குளிருக்கு மத்தியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த சுற்று பேச்சில் எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை எனில், குடியரசு தின விழா கொண்டாடப்படும் ஜனவரி 26-ஆம் தேதி, தலைநகா் தில்லியை நோக்கி டிராக்டா் பேரணி நடத்துவோம் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மததிய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட எல்லைகளை சேர்ந்த விவசாயிகள் கடந்த 38-நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட 6 பேச்சுவார்த்தைகளில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு முழு உடன்பாடு தெரிவிக்காததால், நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதனிடையே நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனில், குடியரசு தின விழாவில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும், ஜனவரி 23-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள ஆளுநர்களின் குடியிருப்புகளை நோக்கி டிராக்டர் அணிவகுப்பு மேற்கொள்ள உள்ளதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

தில்லியில் பகல் 3 மணியளவிலேயே 3 டிகிரிக்கும் கீழான வெப்பநிலையுள்ளதால், அதிகாலை கடும் குளிரில் விவசாயிகள் போர்வைகளை போர்த்தி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் அவர்கள்  தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com