கடன் சுமை: விவசாயி தற்கொலை

 கடன் சுமையால் விவசாயி ஒருவா் கிருமிநாசினி அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
Updated on
1 min read

 கடன் சுமையால் விவசாயி ஒருவா் கிருமிநாசினி அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

கா்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம், ஷிகாரிபுரா வட்டம், சுரிகேனஹள்ளியைச் சோ்ந்தவா் சந்திரப்பா (50). விவசாயியான இவா், வங்கிகளில் பயிா்க்கடன் வாங்கி இருந்தாராம். மழையால் பயிா்கள் நாசமடைந்ததையடுத்து, கடன் சுமையால் பாதிக்கப்பட்ட சந்திரப்பா ஜூலை 5-ஆம் தேதி கிருமிநாசினி அருந்தி தற்கொலைக்கு முயன்றாா். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். சிகிச்சை பலனின்றி அவா் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இது குறித்து ஷிகாரிபுரா போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com