தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை!
/

மகாராஷ்டிரத்தில் முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு புறநகர் ரயில்களில் விரைவில் அனுமதி

மகாராஷ்டிரத்தில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் புறநகர் ரயில்களில் அனுமதிக்கப்படும் நடைமுறை இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குள் அமல்படுத்தப்படலாம் என்று அமைச்சர் தெரிவித்தார். 

News image
Updated On :29 ஜூலை 2021, 11:14 am IST

மகாராஷ்டிரத்தில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் எந்த கட்டுப்பாடுமின்றி புறநகர் ரயில்களில் அனுமதிக்கப்படும் நடைமுறை இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குள் அமல்படுத்தப்படலாம் என மாநில ஜவுளித்துறை அமைச்சர் அஸ்லம் ஷேக் தெரிவித்தார்.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: 

மும்பை புறநகர் ரயில் மற்றும் உள்ளூர் பேருந்துகளில் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அனுமதி குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒருவருக்கு எந்த கட்டுப்பாடுகளுமின்றி உள்ளூர் அளவில் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்பதே அமைச்சராக என்னுடைய கருத்து. இதுபற்றி முதல்வரிடமும் தெரிவித்தோம். இதுகுறித்த அறிக்கையையும் முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளோம். இரண்டு அல்லது மூன்று தினங்களில் இதுகுறித்து முடிவெடுப்பதாக தெரிவித்தார். 

மேலும் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் உணவகங்கள் செயல்படும் நேரம் அதிகரிக்கப்பட வேண்டும். இதுகுறித்தும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றார். 

மும்பையின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் புறநகர்(உள்ளூர்) ரயில் சேவைகள் தற்போது அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்காக மட்டுமே செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்காக புறநகர் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் அமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.