டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.
டோக்கிய ஒலிம்பிக்ஸ் போட்டியின் இன்றைய மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் வீராங்கனை பி.வி.சிந்து, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த மியா பிளிச்பெல்ட்டை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் முடிவில் 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிப்பெற்றார்.
இதையடுத்து பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.