
18-44 வயதுக்குள்பட்டவர்களுக்கு விரைவில் தடுப்பூசி: கோவா சுகாதாரத்துறை
18 முதல் 44 வயதிற்குள்பட்டவர்களுக்கு கோவா அரசு விரைவில் கரோனா தடுப்பூசியைத் தொடங்கவுள்ளது.
இதுதொடர்பாக சுகாதார தேவைகளின் இயக்குநர் டாக்டர் ஜோஸ் டிசா செய்தியாளர்களிடம் கூறுகைகளில்,
புணேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிலிருந்து 32,000 தடுப்பூசி வந்துள்ளன.
தடுப்பூசி எவ்வாறு செலுத்துவது குறித்த திட்டத்தை அரசு மேற்கொண்டு வருகின்றது. பிரத்யேக போர்ட்டல்கள் மூலம் ஆன்லைன் முன்பதிவு செய்த பின்னரே தடுப்பூசிகள் வழங்கப்படும்.
23 ஆரம்பச் சுகாதார நிலையங்கள், ஆறு சமூக சுகாதார மையங்கள், நான்கு நகர்ப்புற சுகாதார நிலையங்கள், பம்போலிமில் உள்ள கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் பனாஜிக்கு அருகிலுள்ள மந்தூரில் உள்ள கிராம சுகாதார மையங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்