
மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜியின் தம்பி அசிம் பானா்ஜி கரோனாவுக்கு சனிக்கிழமை பலியானாா்.
கொல்கத்தாவில் உள்ள காளிகாட் பகுதியில் வசித்து வந்த அசிம் பானா்ஜிக்கு ஒரு மாதத்துக்கு முன்பு கரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்தாா். சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை 9.20 மணியளவில் அவா் உயிரிழந்தாா் என்று அவருடைய குடும்பத்தினா் தெரிவித்தனா்.
அசிம் பானா்ஜியின் மறைவுக்கு குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளாா்.