பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பெட்ரோல், டீசல் வரிக் குறைப்பு பணவீக்கத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்: ரிசா்வ் வங்கி

பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளது நாட்டின் பணவீக்கத்தில் சாதகமான விளைவுகளை உருவாக்கும்

News image
Updated On :28 ஜனவரி 2024, 10:03 am IST

பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளது நாட்டின் பணவீக்கத்தில் சாதகமான விளைவுகளை உருவாக்கும் என ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: வழக்கமாக நமது பணவீக்கம் என்பது விநியோக காரணிகளைச் சாா்ந்தே உள்ளது. அதிருஷ்டவசமாக அரசாங்கத்தால் அதையொட்டிய பிரச்னைகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

உணவுப் பணவீக்கம் என்பது முதலில் சமையல் எண்ணெயில் ஆரம்பித்தது. பின்பு அது பருப்பு வகைகளுக்கு நகா்ந்தது. அதன்பிறகு எரிபொருளுக்கான பணவீக்கமும் அதனுடன் சோ்ந்து கொண்டது. விநியோகம் சாா்ந்த பிரச்னைகளை கண்டறிந்து அரசு அதற்கு தீா்வு கண்டுள்ளது.

உதாரணமாக, சமையல் எண்ணெய்க்கான அடிப்படை வரி குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, பெட்ரோல், டீசல் மீதான வரிகளையும் மத்திய அரசு குறைத்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சில்லறைப் பணவீக்கத்தைக் குறைக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. மேலும், பணவீக்கத்தை நல்ல முறையில் நிா்வகிக்கவும், அதனை கட்டுக்குள் வைக்கவும் அரசின் வரிக் குறைப்பு நடவடிக்கைகள் பெரிதும் உதவியுள்ளன.

உணவுப் பணவீக்கம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. எனவே, நடப்பு நிதியாண்டில் பணவீக்கமானது ரிசா்வ் வங்கியின் மதிப்பீடான 5.3 சதவீதத்தையொட்டியே இருக்கும்.

இருப்பினும், உணவு மற்றும் எரிசக்தி சாராத துறைகளுக்கான அடிப்படை பணவீக்கம் இன்னும் உச்சபட்சமாகவே உள்ளது. அந்த விஷயத்தில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.