கேரளத்தில் இன்று மேலும் 6,468 பேருக்கு கரோனா

கேரளத்தில் ஒரேநாளில் 6,468 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கேரளத்தில் இன்று மேலும் 6,468 பேருக்கு கரோனா
Updated on
1 min read

கேரளத்தில் ஒரேநாளில் 6,468 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 71,906 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 6,468 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,55,224 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 23 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 35,685 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 68,630 சிகிச்சையில் உள்ளனர். 
கரோனாவிலிருந்து இன்று 6,468 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 49,50,281ஆக உயர்ந்துள்ளது.  பல்வேறு மாவட்டங்களில் 2,25,227 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com