கோவாவில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இதில் ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸும் போட்டியிடுகின்றன.
இதையொட்டி, பாஜக குறித்து திரிணமூல் மௌனம் காப்பது தொடர்பாக காங்கிரஸ் விமரிசித்துள்ளது. கோவாவுக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இதையும் படிக்க | ஜன் தன் வங்கிக் கணக்குகளில் மிகப்பெரிய ஊழல்: ராகுல் குற்றச்சாட்டு
"பாஜகவுக்கு உதவுவதுதான் திரிணமூல் காங்கிரஸின் திட்டம். மற்ற அனைத்துக் கட்சிகளையும் வலுவிழக்கச் செய்து, காங்கிரஸைக் குறிவைக்க வேண்டும் என்பது திரிணமூலின் எண்ணமாக உள்ளது. அவர்கள் ஏன் பாஜகவைக் குறிவைக்கக் கூடாது? அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது.
ஐபேக்-ஐ நடத்துபவர்களுக்கு வேறு திட்டம் இருக்கிறது. அவர்கள் மம்தா பானர்ஜிக்கே துரோகம் இழைக்கலாம். மம்தா பானர்ஜிக்கு இதெல்லாம் தெரியுமா, தெரியாதா எனத் தெரியவில்லை" என்றார் தினேஷ் குண்டுராவ்.