எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நாடு முழுவதும் என்ஆர்சி? மக்களவையில் அரசு விளக்கம்

நாடு முழுவதற்கும் தேசிய குடியுரிமைப் பதிவேடு (என்ஆர்சி) தயாரிப்பது குறித்து அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என மக்களவையில் செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.

News image
Updated On :30 நவம்பர் 2021, 10:18 am

DIN


நாடு முழுவதற்கும் தேசிய குடியுரிமைப் பதிவேடு (என்ஆர்சி) தயாரிப்பது குறித்து அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என மக்களவையில் செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.

என்ஆர்சி தொடர்பான கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்ததாவது: 

"நாடு முழுவதற்கும் என்ஆர்சியைத் தயாரிப்பது குறித்து அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை."

மேலும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து கூறுகையில், "குடியுரிமை திருத்தச் சட்டம் டிசம்பர் 12, 2019 அன்று குறிப்பிடப்பட்டு ஜனவரி 10, 2020 முதல் நடைமுறையில் உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் வருபவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.