கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

இனி நீங்களும் பெட்ரோல், டீசலை பரிசளிக்கலாம்; மாற்றி யோசித்த இந்தியன் ஆயில் நிறுவனம்

ஒரு திருமணமாகட்டும், புதுமனை குடிபுகும் நிகழ்வாகட்டும் எதில் பங்கேற்பதாக இருந்தாலும், அவர்களுக்கு என்ன பரிசளிக்கலாம் என்ற குழப்பம் அனைவருக்கும் எழத்தான் செய்யும்.

News image
இனி நீங்களும் பெட்ரோல், டீசலை பரிசளிக்கலாம்; மாற்றி யோசித்த இந்தியன் ஆயில் நிறுவனம்
Updated On :28 ஜனவரி 2024, 5:35 am

DIN

ஒரு திருமணமாகட்டும், புதுமனை குடிபுகும் நிகழ்வாகட்டும் எதில் பங்கேற்பதாக இருந்தாலும், அவர்களுக்கு என்ன பரிசளிக்கலாம் என்ற குழப்பம் அனைவருக்கும் எழத்தான் செய்யும்.

அதற்காக ஒரு கடைக்குள் புகுந்த, அத்தனை பரிசுப் பொருள்களையும் ஒரு உருட்டு உருட்டி, பிறகு எதுவுமே பிடிக்கவில்லை என்று துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு வருவோரும் ஏராளம்.

நாம் வாங்கும் பொருள் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டுமே என்ற கவலையோடுதான் இத்தனையையும் நாம் செய்கிறோம். ஆனால், நாம் வாங்கும் பொருளையே பலரும் வாங்க வாய்ப்பிருக்கும் நிலையில் ஒரு பக்கம் அதுவும் நெருடிக் கொண்டே இருக்கும்.

இதற்கெல்லாம் ஒரு விடிவுகாலம் பிறந்துவிட்டது. நீங்கள் கொடுக்கும் இந்த பரிசுப் பொருள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். அதே சமயம், வாயைப் பிளந்து பார்க்கும் அளவுக்கும் வேறு யாரும் கொடுக்காத பரிசாகவும் இருக்கும்.

அப்படி என்ன என்று கேட்கிறீர்களா.. இத்தனை நாள்களாக விலை உயர்வு பற்றி மட்டுமே பேசி வந்த நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு பரிசுக் கூப்பனை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, என்ற  https://one4u.easyfuel.in/ இணையதளத்தில் சென்று, உங்களுக்கு பிடித்தவர்களுக்குக் கொடுக்க எந்தத் தொகைக்கும் பரிசுக் கூப்ப பெற்றுக் கொள்ளலாம். அதனை அவர்களுக்கு பரிசளிக்கலாம். இந்த பரிசுக் கூப்பனைக் கொண்டு ஒருவர் நாட்டில் எங்கிருக்கும் இந்தியன் ஆயில் பெட்ரோல் வங்கியிலும் எரிபொருளை நிரப்பிக் கொள்ளலாம். 

இத்தனையையும் நாம் ஆன்லைனிலேயே செய்து விடலாம் என்பது கூடுதல் சிறப்பம்சம். பலரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வடையும் போது, கேன்களில் பெட்ரோல், டீசலை வாங்கிக் கொடுப்பார்கள். 

அதனைப் பார்த்து இந்தியன் ஆயில் நிறுவனம் இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்ததா என்று தெரியவில்லை. ஆனால், மாற்றி யோசித்திருக்கிறார்கள். அதன் விளைவுதான் இந்த யோசனை. நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் புதிய விதத்தில் பரிசளிக்க விரும்புவோருக்கு நிச்சயம் இது பயனளிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.