இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்-3) வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் இறந்ததால் மிகப் பெரிய பிரச்னையாக உருவானதும் லக்கிம்பூர் வன்முறையை எதிர்கட்சிகள் கையில் எடுத்ததும் ஆளும் பாஜகவிற்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முக்கியமாக இப்பிரச்னையின் தீவிரம் 2022- தேர்தலில் எதிரொலிக்கும் அபாயம் இருப்பதால் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தைச் சுற்றி இருக்கும் பிலிபித், ஷாஜகான்பூர், ஹார்தோய், சீதாப்பூர் மற்றும் பாஹ்ராய்ச் போன்ற மாவட்டங்களும் பாஜகவினருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.