மும்பை அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் வடக்கு மும்பையின் புறநகர் பகுதியாக காண்டிவலி பகுதியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சார்கோப் காவல் துறையினர் இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக வீடுகளைத் தேடி உணவு வழங்குபவரை கைது செய்தது.
இந்திய தண்டனைச் சட்டம் 376 மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர்.
அக்டோபர் 9-ஆம் தேதி வரை காவல் துறை கட்டுப்பாட்டில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.