வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் சுட்டுக்கொலை: அமித் ஷா நாளை ஆலோசனை

ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் சுட்டுகொல்லப்படுவது அதிகரித்து வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தில்லியில் நாளை (அக். 9) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

News image
அமித் ஷா (கோப்புப் படம்)
Updated On :28 ஜனவரி 2024, 4:19 am

DIN

ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் சுட்டுகொல்லப்படுவது அதிகரித்து வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தில்லியில் நாளை (அக். 9) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் லெப்டினெட் ஜெனரல் மனோஜ் சின்ஹா தலைமையிலான குழுவும் ஆலோசனையில் பங்கேற்கவுள்ளது.

சமீபகாலமாக எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடக்கும்போது பொதுமக்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் மக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

நேற்று ஸ்ரீநகர் அருகே இட்கா சங்கம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கு முன்பு 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

2021-ம் ஆண்டு மட்டும் இதுவரை 28 பொதுமக்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.