டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

'வீட்டில் பணமில்லையென்றால்..' ஆட்சியருக்கு ஒரு திருடனின் கடிதம்

வீட்டில் பணமில்லையென்றால், பிறகு ஏன் பூட்டிச் செல்லவேண்டும் என்று, வீட்டின் உரிமையாளருக்கு திருடன் கடிதம் எழுதிவைத்துவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

'வீட்டில் பணமில்லையென்றால்..' ஆட்சியருக்கு ஒரு திருடனின் கடிதம்

Updated On :28 ஜனவரி 2024, 9:51 am IST


வீட்டில் பணமில்லையென்றால், பிறகு ஏன் பூட்டிச் செல்லவேண்டும் என்று, வீட்டின் உரிமையாளருக்கு திருடன் கடிதம் எழுதிவைத்துவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வீட்டில் திருட்டு போயிருந்தால், அந்த திருடனின் கைரேகையைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் கடும் முயற்சி எடுப்பார்கள். ஆனால், முதல் முறையாக, ஒரு அரசு அதிகாரியின் வீட்டுக்குள் நுழைந்த திருடன், வீட்டு உரிமையாளருக்குக் கடிதம் எழுதிவைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

Story image

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரிகள் குடியிருக்கும் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் இருந்த காட்டேகான் துணை மாவட்ட ஆட்சியர் திரிலோசன் கௌர், வீட்டுக்குள் நுழைந்த திருடன், திரிலோசன் கௌருக்கு ஒரு கடிதம் எழுதிவைத்து விட்டுச் சென்றுள்ளார். அதில், "வீட்டில் பணம் எதுவும் வைக்கவில்லையெனில், பிறகு வீட்டை ஏன் பூட்டிவிட்டுச் செல்கிறீர்கள் ஆட்சியரே?" என்று எழுதப்பட்டிருந்தது.

கடந்த இரண்டு வாரங்களாக தனது வீட்டுக்குச் செல்லாமல் இருந்த திரிலோசன் கௌர், கடந்த சனிக்கிழமை வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அங்கு வீட்டிலிருந்து பொருள்கள் அங்குமிங்கும் கொட்டப்பட்டிருந்ததைப் பார்த்தார். வீட்டிலிருந்த சொற்ப பணமும், சின்ன சின்ன நகைகளும் திருடுப்போயிருந்ததையும் அறிந்து கொண்டார்.

உடனடியாகக் காவலர்களுக்குத் தகவல் கொடுக்க அவர்கள் விரைந்து வந்து சோதனை செய்த போது இந்தக் கடிதம் சிக்கியது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த திருட்டுச் சம்பவம் நடந்த வீடு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடு உள்பட முக்கிய அதிகாரிகளின் வீடுகளைக் கொண்ட பகுதி என்பதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.