நீட் தோ்வை ரத்து செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ஒடிசா மாநில முதல்வா் நவீன் பட்நாயக்கிடம் திமுக மக்களவை உறுப்பினா் கனிமொழி புதன்கிழமை வழங்கினாா்.
நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், டெல்லி, ஜாா்க்கண்ட், ஒடிஸா, பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கா், கோவா ஆகிய 12 மாநில முதல்வா்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 4-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தாா்.
இதையும் படிக்க | லக்கிம்பூர் கலவரம்: விளக்குடன் இளைஞர் காங். பேரணி
இக்கடிதத்தை, அந்தந்த மாநில முதல்வா்களிடம் திமுக எம்.பி.க்கள் நேரில் சந்தித்து வழங்கி வருகின்றனா்.
இந்நிலையில் புதன்கிழமை ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்த திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி முதல்வா் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினாா்.
இதையும் படிக்க | மன்மோகன் சிங் தில்லி எய்ம்ஸில் அனுமதி
நீட் தோ்வு தொடா்பாக ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த பரிந்துரையையும் ஒடிசா முதல்வரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வழங்கினாா்.