முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக் குறைவு காரணமாக புதன்கிழமை மாலை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்செரிச்சலால் உடல் பலவீனமடைந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த திங்கள் கிழமை அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதிலிருந்து குணமடைந்த நிலையில், உடல் பலவீனமடைந்துள்ளது.
89 வயதான மன்மோகன் சிங் கடந்த ஏப்ரல் மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.