குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரு நாள் பயணமாக அக்டோபர் 14, 15 ஆகிய தேதிகளில் ஜம்மு-காஷ்மீர் செல்லத் திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அக்டோபர் 14-ஆம் தேதி சிந்து நதியில் நடைபெறும் பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து லே மற்றும் உத்தம்பூர் பகுதியில் மக்களுடன் உரையாடவுள்ளார்.
இதனையடுத்து அக்டோபர் 15-ஆம் தேதி கார்கில் போரில் இறந்தவர்களுக்கு நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளார்.