லக்கிம்பூர் வன்முறை: மேலும் 4 பேர் கைது

லக்கிம்பூர் வன்முறையில் தொடர்புடைய மேலும் 4 பேரை காவல்துறை கைது செய்திருக்கிறது.
லக்கிம்பூர் வன்முறை: மேலும் 4 பேர் கைது
லக்கிம்பூர் வன்முறை: மேலும் 4 பேர் கைது

லக்கிம்பூர் வன்முறையில் தொடர்புடைய மேலும் 4 பேரை காவல்துறை கைது செய்திருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூா் கெரியில் கடந்த அக் 3-ஆம் தேதி பாஜகவினரின் கார் மோதியதால் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் 4 விவசாயிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் உள்பட 8 போ் கொல்லப்பட்டனா்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்ததையடுத்து இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடக்க மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் லக்கிபூர் வன்முறையில் தொடர்புடைய மேலும் 4 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். கைதானவர்களில் ஒருவரான சத்ய பிரகாஷ் திரிபாதியிடம் தோட்டாக்களுடன் கூடிய துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 

 இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com