2022 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று கோவா சென்றுள்ளார்.
கோவாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அங்கு பல்வேறு கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வரும் அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று கோவா சென்றுள்ளார்.
கோவாவில் கட்சித் தொண்டர்கள் மற்றும் மீனவர் சமூகத்தினருடன் கலந்துரையாட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணிக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களுடன் உரையாடிய அவர், தேர்தல் பணிகள் குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது.
பின்னர் மதியம் 12 மணிக்கு பெட்டிம் பகுதி மீனவர் சமூகத்தினருடன் உரையாடுகிறார். இதையடுத்து 1 மணிக்கு கோவாவில் உள்ள சர்வதேச மையத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்திய பின்னர், பிற்பகல் 3.30 மணிக்கு போண்டா, பிரியோல் பகுதியில் உள்ள மங்குஷி கோயிலுக்கும் மாலை 4 மணிக்கு மார்டோலில் உள்ள ஸ்ரீ மஹால்சா நாராயணி கோயிலுக்கும் 4.30 மணிக்கு குண்டாய்ம் பகுதியில் உள்ள உள்ள தபோபூமி கோயிலுக்கும் செல்கிறார்.
மாலை 5. 45 மணிக்கு கோவாவின் சர்வதேச மையத்தில் சிவில் சொசைட்டி உறுப்பினர்களுடன் உரையாடுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

2-வது அரையிறுதி: இந்தியா பேட்டிங்!

13 ஆண்டுகள் காத்திருப்பை நிறைவேற்றிய ‘ரோ - கோ’ மேஜிக்! 2024 டி20 உலகக் கோப்பை ரீவைண்ட்!!

பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா படத்தின் டிரைலர்!

மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்த அன்புமணி ராமதாஸ்
வீடியோக்கள்

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் ஆர்ச்சரின் சவாலைச் சமாளிப்பாரா சஞ்சு ?
தினமணி வீடியோ செய்தி...

