சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

'நாட்டின் மிகச்சிறந்த நாளாக மாறிய ஆக. 31'

நாட்டில் ஒரு நாளில் மட்டும் 1.33 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி; ஜிடிபி உயர்வு; சென்செக்ஸ், நிஃப்டி வரலாறு காணாத உச்சம்.

News image
'நாட்டின் மிகச்சிறந்த நாளாக மாறிய ஆக. 31'
Updated On :1 செப்டம்பர் 2021, 10:29 am

DIN

ஆகஸ்ட் மாதத்தின் இறுதி நாளான 31-ம் தேதி இந்தியாவின் மிகச்சிறந்த நாளாக மாறியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், நாட்டில் நேற்று (ஆக. 31) ஒரு நாளில் மட்டும் 1.33 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார். 

மேலும், நடப்பு நிதியாண்டில் மார்ச் - ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.1 சதவிகிதம் அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் முடிந்த நிலையில், சென்செக்ஸ் 57,552 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தையும் அடைந்துள்ளதாக அமைச்சர் மாண்டவியா பதிவிட்டுள்ளார். 

August 31 was an extraordinary day for India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.