நாட்டில் நேற்று ஒரே நாளில் 1.13 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நாடு முழுவதும் ஒரே நாளில் 1,13,53,571 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 11 நாள்களில் மூன்றாவது முறையாக ஒரு கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 69,90,62,776(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 27,76,44,784 இரண்டாம் தவணை - 3,59,16,927 |
45 - 59 வயது | முதல் தவணை - 13,80,26,694 இரண்டாம் தவணை - 5,89,70,434 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 9,03,51,520 இரண்டாம் தவணை - 4,72,99,828 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,61,392 இரண்டாம் தவணை - 85,01,490 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,31,433 இரண்டாம் தவணை - 1,36,58,274 |
மொத்தம் | 69,90,62,776 |