அதற்குக் காரணத்தை அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு விளக்கியுள்ளார். அதாவது, கரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியவர்களுக்கும், சில குழந்தைகளுக்கும்தான் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுப்போலத்தான் எந்த சத்தமும் இல்லாமல் கரோனா இரண்டாம் அலை உருவானது. அனைத்துத் துறை அதிகாரிகளையும் சந்தித்தப் பின், இன்னும் 2 அல்லது 3 நாள்களுக்குள் கரோனா பரவல் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படும். ஏற்கனவே, நாக்பூரில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களுக்கு நேரக் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.