விரைவில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்

காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருவதைக் குறிப்பிட்டு செயற்குழுவைக் கூட்ட மூத்த தலைவர்கள் வலியுறுத்திய நிலையில், விரைவில் கூட்டப்படும் என கட்சி வியாழக்கிழமை அறிவித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருவதைக் குறிப்பிட்டு செயற்குழுவைக் கூட்ட மூத்த தலைவர்கள் வலியுறுத்திய நிலையில், விரைவில் கூட்டப்படும் என கட்சி வியாழக்கிழமை அறிவித்தது.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜிநாமா, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ராஜிநாமா என கட்சியில் ஏராளமான குழப்பங்கள் நிலவி வருகின்றன. இதைக் குறிப்பிட்டு கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கபில் சிபல் ஆகியோர் உள்கட்சி விவகாரங்கள் குறித்துப் பேச செயற்குழுக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.

தற்போதைய சூழலில் கட்சியில் தலைவரே இல்லை என கபில் சிபல் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் செயற்குழுக் கூட்டம் விரைவில் கூட்டப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "சிம்லாவுக்குப் புறப்படும் முன், செயற்குழுக் கூட்டம் விரைவில் கூட்டப்படும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டார்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com