தில்லியில், ஒரு லிட்டர் விமான எரிபொருள் விலை தற்போது ரூ.112.92 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விமான எரிபொருள் கடந்த ஜனவரி மாதம் லிட்டருக்கு ரூ.76.1 காசுகளாக இருந்த நிலையில், மார்ச் மாதம் லிட்டருக்கு ரூ.110.7 காசுகளாக அதிகரித்தது. அது இன்று ரூ.112.92 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் விமான எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படுவது வழக்கம்.
எரிபொருள் விலை உயர்வு விமானப் போக்குவரத்துத் துறை பொருளாதாரத்தை பாதிக்கும் என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கடந்த வாரம் தெரிவித்திருந்த நிலையில், இன்று இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.