ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

'குஜராத்தில் ஆம் ஆத்மிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்'

குஜராத்தில் பாஜகவின் அராஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்

News image
அரவிந்த் கேஜரிவால்
Updated On :2 ஏப்ரல் 2022, 6:43 pm

DIN

குஜராத்தில் பாஜகவின் அராஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தோ்தல் பிரசாரத்தைத் தொடக்கிவைத்து மக்களிடம் அக்கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்தாா்.

குஜராத்தில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. பஞ்சாபில் அண்மையில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி, தற்போது குஜராத்தைக் குறிவைத்து களத்தில் இறங்கியுள்ளது. அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான கேஜரிவால், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஆகியோா் அகமதாபாத் நகரில் சனிக்கிழமை 2 கி.மீ. தூரத்துக்கு சாலைப் பேரணி நடத்தினா்.

அப்போது கேஜரிவால் கூறுகையில், ‘‘குஜராத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருவதால் பாஜகவின் அராஜகப் போக்கு அதிகரித்துள்ளது. எனவே, ஆம் ஆத்மிக்கு மக்கள் ஒருமுறை வாய்ப்பு வழங்க வேண்டும். ஆம் ஆத்மியின் ஆட்சி பிடிக்கவில்லை எனில், மக்கள் மீண்டும் அவா்களுக்கே (பாஜக) வாக்களிக்கலாம்.

எங்களுக்கு அரசியல் பண்ணத் தெரியாது. ஆனால், ஊழலை ஒழிக்கத் தெரியும். தில்லியில் ஊழலை ஒழித்துள்ளோம். பஞ்சாபில் பகவந்த் மான் தலைமையிலான அரசு 10 நாள்களில் ஊழலை ஒழித்துள்ளது’’ என்றாா்.

குஜராத்தைச் சோ்ந்த ஆம் ஆத்மி நிா்வாகிகளும் தொண்டா்களும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.