மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

நாட்டின் பாதுகாப்பே எங்களின் முதன்மையான முன்னுரிமை: அமைச்சர் ராஜ்நாத் சிங்

தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முழு ஈடுபாட்டுடன் இருக்கும் ரானுவம் முதன்மையான முன்னுரிமை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வலியுறுத்தியுள்ளார்.

News image
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்
Updated On :2 ஏப்ரல் 2022, 10:20 am

DIN

ஹைதராபாத்: தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முழு ஈடுபாட்டுடன் இருக்கும் ராணுவம் முதன்மையான முன்னுரிமை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வலியுறுத்தியுள்ளார்.

ஹைதராபாத்தில் சேடக் ஹெலிகாப்டர்களின் வைர விழா மாநாட்டில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

"நாட்டின் பாதுகாப்பே எங்களின் முதன்மையான முன்னுரிமை என்பதை நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அதை உறுதி செய்வதில் நாங்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளோம். கடந்த சில ஆண்டுகளின் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, ​​நமது அரசாங்கம் பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவு மற்றும் தயார்நிலைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது." என்று அவர் கூறினார்.

"இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டைப் பாதுகாக்கும் சுமை மற்ற நாடுகளின் தோள்களில் நீண்ட காலம் இருக்க முடியாது" என்றும், "நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் நமது தோள்களை வலுப்படுத்த வேண்டும்" என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

"உலகில் அமைதி காக்கப்பட வேண்டுமானால், நாடுகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. அவர்களின் பாதுகாப்பிற்கு, இராணுவ ரீதியாக வலுவாக இருப்பது மிகவும் அவசியம்" என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

இன்று 5 டன் வகை ஹெலிகாப்டர்களின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் இயக்கத்தில் இந்தியா தனது பலத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

"உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட, மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்-DHRUV மற்றும் அதன் மாறுபாடுகள் இந்தியாவின் வலிமைக்கு எடுத்துக்காட்டுகள்" என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.