தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

ஜம்மு-காஷ்மீரில் வால்நட் தொழிற்சாலையில் தீ விபத்து

ஜம்மு-காஷ்மீரின், சம்பா மாவட்டத்தில் உள்ள வால்நட் தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :6 ஏப்ரல் 2022, 5:01 pm

DIN

ஜம்மு-காஷ்மீரின், சம்பா மாவட்டத்தில் உள்ள வால்நட் தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள வால்நட் எரிந்து நாசமானது. 

தீ விபத்து குறித்து காவல் அதிகாரிகள் கூறுகையில், 

பாரி பிராமணாவில் உள்ள பீர்பூர் தொழில் வளாகத்தில் உள்ள வால்நட் தொழிற்சாலையில் அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த தீ விபத்தால் தொழிற்சாலைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், 12 மணி நேரத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தீயை அணைக்க பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். 

தீ விபத்துக்கான காரணங்கள் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.