ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

நிதின் கட்கரியுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி தில்லியில் சந்தித்தார். 

News image
Updated On :6 ஏப்ரல் 2022, 6:00 am

DIN

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி இன்று தில்லியில் சந்தித்தார். 

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று(செவ்வாய்க்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். 

மாநில கோரிக்கைகளான போலாவரம் திட்டம், கடப்பா உருக்கு ஆலை, தெலங்கானாவில் இருந்து மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை உள்ளிட்ட பல திட்டங்கள், பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் விளக்கினார். மேலும், போலாவரம் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். 

Story image

இதைத் தொடர்ந்து இன்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்துப் பேசினார். மாநிலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களின் நிலை குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.