தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

ரஜௌரியில் பள்ளி மாணவிகளை சரமாரியாக அடித்த ஆசிரியர் இடைநீக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜௌரி மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில் இரண்டு சிறுமிகளை அடித்ததற்காக பள்ளி ஆசிரியர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் துணை ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 2:33 pm

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜௌரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் இரண்டு சிறுமிகளை அடித்ததற்காக பள்ளி ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் துணை ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

யூனியன் பிரதேசத்தில் உள்ள கதுரியன் பஞ்சாயத்து டிராம்மன் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார் நிசார் அகமது. இவர் மாணவிகள் இருவரை அடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இதற்கிடையில், மாவட்ட நிர்வாகம் மறு உத்தரவு வரும் வரை அகமது பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்கக் கூடுதல் துணை ஆணையர் கோட்ரங்காவை விசாரணை அதிகாரியாகத் துணை ஆணையர் நியமித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.