ஜார்கண்டில் உள்ள லோஹர்டகாவின் ஹிர்ஹி கிராமத்தில் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டதில், ஒருவர் பலியானர், அதைத் தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் குமார் கூறுகையில்,
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள லோஹர்டகா மாவட்டத்தில் உள்ள ஹிர்ஹி பகுதியில் ஷோபா யாத்திரையின்போது கல்வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் காயமடைந்தனர். பல வாகனங்கள் எரிக்கப்பட்டன.
ராம நவமியின்போது இருபிரிவினருக்கு இடையே மோதல் சம்பவங்கள் நடைபெற்றதை முன்னிட்டு ஹிர்ஹி கிராமத்தில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் போலீஸ் தரப்பில், கூடுதல் படைகள் மற்றும் மூத்த அதிகாரிகள், இரண்டு, துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் 3 கண்காணிப்பாளர்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
நிலைமை கண்காணிக்கப்பட்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த மோதலில் உயிரிழந்தவர், லதேஹர் மாவட்டத்தில் வசிப்பவர். இந்த விவகாரத்தில் விசாரணை தொடங்கியுள்ளோம். தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தகட்டூா் ஆகாசமாரியம்மன் கோயில் குடமுழுக்கு

அனுமதியின்றி மணல் வெட்டி எடுத்த இருவா் கைது

பாதாள மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

